Friday, August 21, 2009

ப்லோகுக்கு தமிழாக்கம் வலைப்பதிவு! நான் இத கண்டுபிடிக்கரதுல படு லேட்!

இன்றைக்கும் சுதா சேஷய்யன் கதைக்கு போயிருந்தேன். மிகவும் பிடித்த இரண்டு விஷயங்கள் இன்று கேட்டதில்.
  1. விவேகானந்தர் தன் குருவை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். கடவுளை பார்த்திருக்கீர்களா என்று சிலரிடம் கேட்டபோது பின்வாங்கினார்கள். மற்ற சிலரை கடவுளை பார்த்திருந்ததாக சொன்னால்அவரை எனக்கு காண்பிக்க முடியுமா என்று கேட்டபோது பின்வாங்கினார்கள். ராமகிருஷ்ணரை பார்த்தார். கடவுளை பார்த்திருக்கீர்களா என்று கேட்டபோது பார்த்திருக்கிறேன் என்றார். எனக்கு காண்பிக்கமுடியுமா என்று கேட்டார். முடியும் என்றார் ராமகிருஷ்ணர். விவேகானந்தருக்கு மிக்க மகிழ்ச்சி. ராமகிருஷ்ணர் தொடர்ந்தார். நான்காண்பித்துவிடுவேன். பார்ப்பதும் பார்காததும் உன் கையில் இருக்கிறது என்றார்!
  2. கண்ணதாசன் கடவுளிடம் தன் சந்தேகங்களை கேள்விகளாகக் கேட்கிறார்! அருமையான கவிதை!
    பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
    பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
    படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
    படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
    அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
    அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
    அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
    அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
    பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
    பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
    மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
    மணந்து பாரென இறைவன் பணித்தான்!
    பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
    பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
    முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
    முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
    வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
    வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
    இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
    இறந்து பாரென இறைவன் பணித்தான்!
    'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
    ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
    ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
    'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
Vedas - மகாபெரியவரின் வேதங்களை பற்றிய நூலை படித்து முடித்தேன். அடடா! அவர் இவற்றை பற்றி சொற்பொழிவாற்றும் பொழுது கேட்காமல் விட்டோமே என்ற மன வருத்தம் எழுகிறது...


Wednesday, August 19, 2009

பிள்ளையார் சுழி!

ப்லோகுக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு! அதுவும் தமிழில். இதற்கு இரண்டு காரணங்கள் - ஒன்று, இந்த transliteration யூஸ் பண்றதுக்கு ஜாலியா இருக்கு! இன்னொன்று, நானும் ப்லோக் (blog இன் தமிழாக்கம் என்னன்னு யாரவது சொல்லுங்களேன்) களத்தில் இறங்கனுங்கர ஆசை தான்! interesting tidbit - இப்போ எல்லாம் third person ல (he, she) எழுறதே கொறைஞ்சு போயிடுச்சாம் and one of the key reasons for that apparently is the rise of blogging.

சுதா சேஷய்யன் கதைக்கு போயிருந்தேன். அற்புதம். கந்த புராணத்தை பற்றி சொற்பொழிவு. a couple of interesting highlights -

முருகன் வைதாரையும் வாழ வைக்கும் தமிழ்க் கடவுள். அதற்கு ஒரு அருமையான உதாரணம்.

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி
ஏவருந் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி


இது திருப்புராணம். இதில் என்ன விசேடம் என்றால் முருகனை புகைழந்த அதே மூச்சில் சூரபத்மானகிய சேவலும் மயிலும் போற்றபட்டிருக்கிறது.
வைதாரையும் வாழ வைக்கும் தமிழ்க்கடவுள்!